பெற்றோரின் பிரிவால், திருமணம், குடும்பம் என்பதில் நம்பிக்கை இல்லாதவனாக இருக்கிறான் வாசு (ரியோ ராஜ்). அப்பாவும் தாத்தாவும் ஆணாதிக்கவாதிகளாக இருந்தாலும் குடும்ப அமைப்பின் நன்மையை உணர்ந்து வளர்ந்தவள் மனோ (கோபிகா ரமேஷ்). காதலில் விழும் இருவரும் பின்னர் ‘பிரேக்-அப்’ என்று பேசிப் பிரிய, அடுத்த சில நாள்களில் மனோ கர்ப்பமாக இருப்பது உறுதியாகிறது. அதைக் கலைத்துவிட வற்புறுத்துகிறான் வாசு. அதற்கு மனோ ஒப்புக்கொண்டாளா, இல்லையா என்பது கதை.
ஓர் அறிமுக இயக்குநர் தன்னுடைய முதல் படைப்பைச் சமூகத்தின் மேன்மைக்காகக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து அதற்காகப் போராடி உருவாக்குவது தமிழ் சினிமாவில் அபூர்வமாக நிகழும் சம்பவம். அப்படியொரு சம்பவத்தைச் செய்திருக்கிறார் ஸ்வினீத் எஸ். சுகுமார்.