புதுச்சேரி: ஹோலி பண்டிகையொட்டி ஜிப்மரில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு வரும் 14-ல் இயங்காது என்று ஜிப்மர் அறிவித்துள்ளது.
புதுவை ஜிப்மர் இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மத்திய அரசு விடுமுறை தினமான வரும் 14-ம் தேதி ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது. இந்த தேதியில் நோயாளிகள் வருவதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். எனினும் அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம்போல இயங்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.