லக்னோ: வண்ணங்களின் பண்டிகையான ஹோலி இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், ஹோலியின் வண்ணங்களை எதிர்த்தால் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் என உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் சஞ்சய் நிஷாத் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சை ஆகியுள்ளது.
ஹோலி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பொதுமக்கள் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். இந்த நேரங்களில் அவ்வழியில் அமைந்துள்ள மசூதிகள் மீது வண்ணக் கலவைகள் படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதையடுத்து, உத்தரப் பிரதேச மாநிலத்தில் கவலரம் ஏற்படாமல் தடுக்க, முதல் முறையாக அலிகர், பரேலி, சம்பல் நகரங்களில் உள்ள சில மசூதிகள் தார்பாய்களால் மூடப்பட்டுள்ளன.