சென்னை: நடப்பாண்டில் ஒரு லட்சம் இயற்கை விவசாயிகளை ஊக்குவிக்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) திட்டமிட்டுள்ளது என அவ்வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி அஜய்குமார் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பால் பொருட்கள் கூட்டுறவு நிறுவனமான அமுல் மற்றும் ரிச்பிளஸ் ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.