பாலக்கோடு : பாலக்கோடு அருகே 10ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்ததால் விரக்தியடைந்த மாணவி, மாட்டு கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேகத்தை ஏற்படுத்தி உள்ளது.தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பேளாரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன்.
கட்டிட மேஸ்திரியான இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இளைய மகள் காசிகா(15), அங்குள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில், காசிகா கணித பாடத்தில் தேர்ச்சி பெறாததால், 10ம் வகுப்பில் தோல்வியடைந்தார். இதனால், விரக்தியடைந்த காசிகா, வீட்டின் அருகே உள்ள மாட்டு கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த தகவலின்பேரில், பாலக்கோடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post 10ம் வகுப்பு தேர்வில் தோல்வி ; மாணவி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.