சென்னை: ரயில் நிலையங்களில் குறைந்தபட்சம் 10 நிமிடம் நிறுத்தப்படும் ரயில்களின் கழிப்பறைகளை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும் என்று வாரியம் உத்தரவிட்டுள்ளது. நெடுந்தொலைவு இயக்கப்படும் ரயில்களில் கழிப்பறைகள் முறையாக சுத்தம் செய்யப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.
தண்ணீர் குழாய்கள் உடைந்திருப்பது, ரயில்களில் போதிய தண்ணீர் நிரப்பாதது போன்ற காரணங்களால், கழிப்பறைகள் பல நேரங்களில் அசுத்தமாக காணப்படுகின்றன. இந்நிலையில், 10 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் நிறுத்தப்படும் நிலையங்களில், ரயில் கழிப்பறைகளை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும் என்று ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.