சென்னை: திருவள்ளூர் பிரீமியர் லீக் ஹாக்கி தொடரின் 3-வது சீசன் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நாளை (11-ம் தேதி) தொடங்குகிறது. வரும் 31-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
இதில் ‘ஏ’ பிரிவில் வருமான வரித்துறை, மாஸ்கோ மேஜிக், தியானத் வீரன்ஸ், ஜிஎஸ்டி & சென்ட்ரல் எக்சைஸ், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய 5 அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் இந்தியன் வங்கி, ஏ.ஜி. அலுவலக அணி, எஸ்.எம். நகர் ஹாக்கி, பட்டாபிராம் ஸ்ட்ரைக்கர்ஸ், தெற்கு ரயில்வே ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.