மான்செஸ்டர்: 10 ஆண்டுகளில் முதல் முறையாக அயலகத்தில் ஒரே இன்னிங்ஸில் 500+ ரன்களை இந்திய அணி மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் விட்டுக் கொடுத்துள்ளது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 544 ரன்கள் எடுத்த நிலையில் 3-ம் நாள் ஆட்டத்தை நிறைவு செய்தது.
முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட் ஆகும் வரை அந்த அணி பேட் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பென் ஸ்டோக்ஸ் 77 ரன்களுடன் களத்தில் உள்ளார். அவர் சதம் விளாசும் முயற்சியில் ஈடுபடலாம். இந்நிலையில்தான் இந்திய அணி ஒரே இன்னிங்ஸில் 500+ ரன்களை எதிரணிக்கு விட்டுக் கொடுத்துள்ளது.