நூறு நாள் வேலை திட்டம் என்றழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் (MGNREGS) நாடு முழுவதும் உள்ள கிராமப்புற ஏழை, எளிய மக்களைக் கவர்ந்த திட்டமாகும். இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்த நாடாளுமன்ற நிலைக்குழு, இத்திட்டம் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்பது குறித்து அறிய தேசிய அளவில் தனி ஆய்வு மேற்கொள்வது அவசியம் என பரிந்துரை அளித்துள்ளது.
அதுமட்டுமின்றி, 100 நாள் என்று இருப்பதை 150 நாட்களாக உயர்த்த வேண்டும் என்றும், மலைப் பிரதேசங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு 200 நாளாக அதிகரிக்க வேண்டும் என்றும், நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் ஊதியத்தை 400 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும் பரிந்துரை அளித்துள்ளது.