புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட கடற்பகுதியில், கடல்வாழ் உயிரினங்களின் உணவான கடற்புற்களை (கடல்தாழை) நடவு செய்யும் பணியை வனத் துறை மேற்கொண்டுள்ளது. கடற்பசு உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களுக்கும், உணவுக்காகவும் கடல் தாழைகள் பயன்படுகின்றன.
ஒரு கடற்பசு நாளொன்றுக்கு 40 கிலோ முதல் 50 கிலோ வரை கடல்தாழைகளை உணவாக உட்கொள்ளும் என வனத் துறையினர் கூறுகின்றனர். மேலும், நண்டு, மீன், இறால் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்யவும் கடல்தாழைகள் வெகுவாக பயன்படுகின்றன.