துபாயில் நடந்த இந்தியா – பாகிஸ்தான் டி20 ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்தியா முழு ஆதிக்கம் செலுத்தியது. இந்தப் போட்டி தொடக்கத்தில் இருந்தே ஒரு தலைபட்சமாகச் சென்றது. இந்தியா வெற்றி என்பது முதலில் இருந்தே உறுதியானது போலவே பாகிஸ்தான் விளையாடியது.
டி20 சர்வதேசப் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக 11-3 என்ற வெற்றி விகிதத்தை இந்திய அணி நேற்றைய வெற்றியுடன் கடைப்பிடித்து வருகிறது. ஹர்திக் பாண்டியா தன் முதல் பந்திலேயே சயீம் அயூபை வீழ்த்தினார். அயூப் என்ன ஆடினார் என்பது அவருக்கே வெளிச்சம். பாயின்டில் பும்ரா கையில் கேட்ச் ஆனது. 0/1 என்று அதிர்ச்சித் தொடக்கம் கண்டது.