நடப்பு ஐபிஎல் சீசனில் 300 ரன்கள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை சாத்தியமாக்கும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பார்க்கப்படுகிறது. ஏனெனில், அந்த அணியின் தாக்குதல் ஆட்டம் அதற்கு காரணமாக அமைந்துள்ளது. அவர்களது பிராண்ட் ஆஃப் கிரிக்கெட் அப்படி. அதிரடி ரன் குவிப்பில் வரிந்து கட்டும் ஹைதராபாத் பேட்டிங் ஆர்டரில் புதுவரவாக இணைந்துள்ளார் அனிகேத் வர்மா.
அந்த அணியின் டாப் ஆர்டரில் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன் உள்ளனர். நடுவரிசையில் கிளாஸன், நிதி குமார் ரெட்டி நம்பிக்கை அளிக்கின்றனர். அந்த அணியின் லோயர் மிடில் ஆர்டரில் நம்பிக்கை அளிக்கிறார் அனிகேத் வர்மா.