வாசகர்களின் பாசப் பிணைப்புடன் 'இந்து தமிழ் திசை நாளிதழின் பரவசப் பயணம் பன்னிரண்டாம் ஆண்டை நிறைவு செய்திருக்கிறது. ஊடக அறத்துடன் தரமான நாளிதழாக 'இந்து தமிழ் திசை' இன்றளவும் மிடுக்குடன் திகழக் காரணம் வாசிப்பை நேசிக்கும் வாசக நெஞ்சங்களாகிய உங்களின் பேராதரவுதான்!
வழக்கம் போலவே, இந்த ஆண்டும் நேரடியாகவும், செய்தியாளர்கள் மூலமும் முன்கூட்டியே வாழ்த்துகளைப் பறக்கவிட்ட பேரன்பு வாசகர்களுக்கு ஆசிரியர் குழு சார்பில் உளமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.