சென்னை: தமிழக கடலோர பகுதியில் 1,382 கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கிய நிலையில், மீன்பிடி விசைப்படகுகள் விதிமீறல்களில் ஈடுபடுவதை கண்காணிக்க அவற்றில் கருவிகள் பொருத்தப்படும் என்று வனத்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.
வனத்துறை சார்பில் கடல் ஆமைகள் பாதுகாப்பு தொடர்பாக மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கடலோர காவல்படை, இந்திய கடற்படை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வனத்துறை அமைச்சர் க.பொன்முடி தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று (பிப்.14) நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கடல் ஆமைகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வனத்துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள், தன்னார்வ அமைப்புகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.