ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதேவேளையில் 2-வது தோல்வியை பதிவு செய்த பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
விராட் கோலி 14,000 ரன்கள்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி 15 ரன்களை எடுத்திருந்த போது சர்வதேச ஒருநாள் போட்டியில் 14 ஆயிரம் ரன்களை எட்டினார். 287 இன்னிங்ஸ்களில் இந்த மைல் கல் சாதனையை அவர் எட்டி உள்ளார். இதன் மூலம் 14 ஆயிரம் ரன்களை விரைவாக சேர்த்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.