இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இடையே முதன்முறையாக கடந்த 1887-ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 150-வது வருட கொண்டாட்டத்தையொட்டி பகலிரவு டெஸ்ட் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி வரும் 2027-ம் ஆண்டு மார்ச் 11 முதல் 15-ம் தேதி வரை மெல்பர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் பிங்க் பந்து போட்டியில் விளையாடும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் பிரனாய் தோல்வி