சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் 17 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி துணிப்பை விற்பனை இயந்திரங்களை மேயர் ஆர்.பிரியா நேற்று தொடங்கிவைத்தார்.
சென்னை மாநகராட்சி சார்பில் அண்ணாநகர் மண்டலம், 106-வது வார்டு, எம்எம்டிஏ காலனி பிரதான சாலை, தபால் நிலையம் அருகில் `மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தின் கீழ் தானியங்கி துணிப்பை விற்பனை இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா பங்கேற்று திறந்துவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: