கடந்த 2 ஆண்டுகளில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 56 லட்சத்துக்கும் மேற்பட்ட குறைதீர்ப்பு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் எழுத்துபூர்வமாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு மூலம் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் வரை, 52,36,844 குறைதீர்ப்பு மனுக்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டன. இதே காலத்தில் ஏற்கெனவே நிலுவையில் இருந்த மனுக்களுடன் சேர்ந்து 56,63,849 குறைகளுக்கு தீர்வு காணப்பட்டன. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி நிலவரப்படி மத்திய அரசு துறைகள் மற்றும் அமைச்சகங்களில் 59,946 மனுக்கள் நிலுவையில் உள்ளன.