சென்னை: கடந்த 2 ஆண்டுகளாக வெங்காயம் வரி விதிப்பால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக, மத்திய அரசு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:மத்திய அரசு இந்தியா முழுவதும் விளையும் பெரிய வெங்காயத்திற்கும், தமிழ்நாட்டில் மட்டும் விளையும் சின்ன வெங்காயத்திற்கும் வேறுபாடு தெரியாத அரசாகவே 75 ஆண்டு காலமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.