புதுடெல்லி: “இரண்டு நிமிட புகழுக்காக அடுத்தவரை அவமானப்படுத்தி, அவர்கள் மீது அவதூறு பரப்ப இவர்கள் யார்?” என ஏக்நாத் ஷிண்டேவை கேலி செய்த குணால் கம்ராவை பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் சாடியுள்ளார்.
மகராஷ்டிராவைச் சேர்ந்த நையாண்டி கலைஞர் குணால் கம்ரா, தனது நிகழ்ச்சி ஒன்றில் ‘தில் தோஹ் பகல் ஹைய்’ என்ற இந்திப் படத்தின் பிரபலமான பாடலைப் பாடி, மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை நேரடியாக குறிப்பிடாமல் துரோகி என மறைமுகமாக பகடி செய்திருந்தார். மேலும் மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் பிளவுகளையும் கேலி செய்திருந்தார். குணாலின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.