இந்திய அணி இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது, முதல் டெஸ்ட் வரும் 20-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டிக்கு இங்கிலாந்தின் அதிவேக பந்து வீச்சாளார் ஜோப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து அணியில் இடம்பெறுவார் என்று ஆதாரபூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்து அணித்தேர்வுக்குழுவும் இதை உறுதி செய்துள்ளது. இன்னும் 15 நாட்களில் சசெக்ஸ் அணி டுர்ஹம் அணியுடன் செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் மோதும் போது ஆர்ச்சரின் உடல்தகுதி தெரிந்து விடும். எனவே 2-வது இந்திய டெஸ்ட் போட்டிக்கு ஆர்ச்சர் அணிக்குள் வருவதற்கான பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.