புதுச்சேரி: 20 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாததால், புதுவை, காரைக்கால் அரசு கல்லூரி உதவி பேராசிரியர்கள் பேரணியாக சென்று ஆளுநர் மாளிகையில் மனு அளித்தனர்.
புதுவை அரசு கல்லூரி பேராசிரியர்கள் கூட்டுப் போராட்டக் குழு சார்பில் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி அருகே புறப்பட்ட பேரணிக்கு குழுவின் தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். செயலர் சங்கரய்யா முன்னிலை வகித்தார். பேரணி அஜந்தா சிக்னல், மிஷன் வீதி, நேரு வீதி வழியாக ராஜ்நிவாஸை அடைந்தது. அங்கு கோரிக்கை மனு அளித்தனர்.