சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டெழும் என அந்த அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். தோனி தலைமையிலான அணியை ஒருபோதும் நிராகரித்து விட முடியாது என அவர் தெரிவித்துள்ளார். நடப்பு சீசனில் 8 ஆட்டங்களில் 6-ல் தோல்வி தழுவியுள்ளது சிஎஸ்கே.
அணியின் படுமோசமான ஆட்டத்தால் சிஎஸ்கே ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது சிஎஸ்கே. பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முன்னாள் சிஎஸ்கே வீரர்கள், ரசிகர்கள், விமர்சகர்கள் என பலரும் அணியின் செயல்பாட்டை விமர்சித்து வருகின்றனர்.