தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 2024-25-ம் நிதியாண்டில் 8.25 சதவீதமாக தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இபிஎப்ஓ) உயர்நிலை குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பி.எப் சேமிப்புக்கான வட்டியை 2024-25-ம் ஆண்டில் 8.25 சதவீமாக தொடர முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவு மத்திய நிதியமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். மத்திய அரசின் அனுமதி கிடைத்தது, 7 கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களின் கணக்குளில் பி.எப் சேமிப்புக்கான வட்டி செலுத்தப்படும்.