சட்டப்பேரவையில், பட்ஜெட் மீதான விவாதத்தின் இறுதி நாளான நேற்று, 2024-25-ம் நிதியாண்டின் ரூ.19,287.44 கோடிக்கான இறுதி துணை மதிப்பீடுகளை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: அவையில் வைக்கப்பட்டுள்ள இந்த துணை மதிப்பீடுகள் ரூ.19,287.44 கோடி நிதி ஒதுக்கத்துக்கு வகை செய்கிறது. இதில், ரூ.12,639.36 கோடி வருவாய் கணக்கிலும், ரூ.6429.20 கோடி மூலதனக் கணக்கிலும், ரூ.218.88 கோடி கடன் கணக்கிலும் அடங்கும்.