தூத்துக்குடி: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 2025-26-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.305 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் இயக்குநர் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில் 2025- 2026-ம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கை முடிவுகள் இறுதி செய்யப்பட்டன.