சென்னை: இந்த ஆண்டு பிறந்து 2 மாதங்களை கடந்தும் இதுவரை வருடாந்திர தேர்வு அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடாததால் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும், பிஎட். பட்டதாரிகளும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், வட்டார கல்வி அதிகாரிகள் (பிஇஓ) அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள், அரசு கலை அறிவியல் கல்லூரி, அரசு சட்டக்கல்லூரி மற்றும் அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வாயிலாக தேர்வு செய்யப்படுகிறார்கள். மேலும், டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வையும் டிஆர்பி-தான் நடத்துகிறது.