திண்டுக்கல்: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் மற்றும் யார், யாருக்கு எவ்வளவு தொகுதிகள் என்பதை அமித்ஷாவும், பழனிசாமியும் முடிவு செய்வார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
ஈஸ்டர் சிறப்புப் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்ற திண்டுக்கல் மேட்டுப்பட்டி வியாகுல அன்னை ஆலயத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று வந்தார்.