திருநெல்வேலி: திருநெல்வேலியில் பாஜக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழக முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பேசிய தமிழக முதல்வர் 2026 தேர்தலில் திமுக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று உறுதிபட தெரிவித்தார்.
திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் சோலார் ஆலைகளை தொடங்கி வைத்தபின் திருநெல்வேலி சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.11.57 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களை சீரமைத்து மேம்படுத்தும் பணிகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார்.