கோவை: “வரும் 2026 தேர்தலில் திமுக அரசு அவுட் ஆஃப் கன்ட்ரோலுக்கு சென்று விடும்” என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ கோவையில் நடந்த கலந்துரையாடல் நிகழ்வில் பேசினார்.
பாஜக கோவை பெருங்கோட்டம் சார்பில், நிர்வாகிகளுடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துரையாடும் நிகழ்ச்சி, கோவை காளப்பட்டியில் உள்ள தனியார் அரங்கில் இன்று (ஏப்.19) மாலை நடந்தது. இந்தக் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ பேசியது: “வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை ஆட்சியை விட்டு இறைவன் வீட்டுக்கு அனுப்பப் போகிறான். கூட்டணியைப் பற்றியும், எத்தனை சீட் என்பதை பற்றியும் நமது தோழர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். அது குறித்து ஃபேஸ்புக், ட்விட்டரில் பதிவிட வேண்டாம். அதைப் பற்றி அகில இந்திய தலைமை முடிவு செய்து கொள்ளும்.