விழுப்புரம்: “தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின் கூட்டணி ஆட்சிதான் அமையும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
திண்டிவனத்தில் இன்று (மார்ச் 17) வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு மே 11-ம் தேதி நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியது: “சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் கூட்டணி ஆட்சிதான் அமையும்.