தூத்துக்குடி: “2026 தேர்தலுக்குப் பின் திமுக ஆட்சி இருக்குமா, இருக்காதா என்பது அரசு ஊழியர்கள் கையில்தான் உள்ளது” என சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் ஆ.ஜெசி தெரிவித்தார்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 14-வது மாவட்ட மாநாடு தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கூட்டரங்கில் இன்று (மார்ச் 22) நடந்தது. மாநாட்டில், 40 ஆண்டு காலமாக பணிபுரிந்து வரும் சத்துணவு ஊழியர்களின் முழுநேர அரசு ஊழியராக்கி வரையறுக்கப்பட்ட காலம் வரை ஊதியமும் குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களின் பணி சுமையை கருத்தில் கொண்டு காலியாக உள்ள ஆயிரக்கணக்கான காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும்.