புதுடெல்லி: வரும் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா உயர் வருவாய் கொண்ட நாடாக மாற சராசரியாக 7.8 சதவீத வளர்ச்சி தேவை என்று உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உலக வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2000 ஆண்டு முதல் இன்று வரை இந்தியப் பொருளாதாரம் 4 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. தனிபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி கிட்டத்தட்ட 3 மடங்காகியுள்ளது. உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு 2000-ம் ஆண்டில் 1.3% ஆக இருந்தது. இது 2023-ல் இரு மடங்காக, அதாவது 3.4% ஆக அதிகரித்துள்ளது. உலகின் 5-வது மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளது.