கடந்த 2014-ம் ஆண்டு மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை, தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில், அமெரிக்காவின் ஓசன் இன்பினிட்டி என்ற ரோபோட்டிக் நிறுவனம் தேட மலேசிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நகருக்கு மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 777 ரக விமானம் (எண்:370), 239 பயணிகளுடன் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி புறப்பட்பட்டு சென்றது. இவர்களில் பெரும்பாலானோர் சீனர்கள். புறப்பட்ட சிறிது நேரத்தில் இந்த விமானம் ரேடாரில் இருந்து மறைந்தது. அந்த விமானம் வழக்கமான பாதையில் இருந்து விலகி தெற்கு இந்திய பெருங்கடல் நோக்கி சென்று விபத்துக்குள்ளாகியதாக செயற்கைகோள் தகவல்கள் தெரிவித்தன. பைலட் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பது கடைசி வரை மர்மமாகவே இருந்தது.