ஹரி இயக்கவுள்ள அடுத்த படத்தில் பிரசாந்த் நாயகனாக நடிக்கவுள்ளார். இந்தக் கூட்டணி 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைகிறது.
‘அந்தகன்’ படத்துக்குப் பிறகு பிரசாந்த் நாயகனாக நடிக்க பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார்கள். இன்று (ஏப்ரல் 6) பிரசாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, அவருடைய 55-வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி பிரசாந்த் 55-வது படத்தினை ஹரி இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.