ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்திலிருந்து, கடந்த பிப். 22ம் தேதி, கடலுக்குச் மீன்பிடிக்கச் சென்ற சேசுராஜா, வியாகுலம், ஆரோக்ய மண்ட்ரோ, கோபால் ஆகியோருக்குச் சொந்தமான நான்கு விசைப்படகுகளையும், அதிலிருந்த 28 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். இதனைத்தொடர்ந்து மீனவர்கள் தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீனவர்களின் காவல் நேற்று நிறைவடைந்ததை தொடர்ந்து, மீண்டும் தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, 28 மீனவர்களுக்கும் இலங்கை மதிப்பில் தலா ரூ.2.50 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இது இந்திய மதிப்பில் மொத்தம் ரூ.20.50 லட்சம் ஆகும். அபராத தொகை கட்டிய பின் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post 28 தமிழக மீனவர்களுக்கு ரூ.20.50 லட்சம் அபராதம்: இலங்கை நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.