கொழும்பு: மூன்று நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிய 3 நாடுகள் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வந்தது. இதில் இந்தியா, இலங்கை அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. கொழும்பிலுள்ள பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் குவித்தது.