புதுடெல்லி: முன்னணி ஐ.டி. நிறுவனங்களின் ஒன்றான அசென்ச்சர் கடந்த 3 மாதங்களில் உலகம் முழுவதும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. ஏஐ தொழில்நுட்பத்துக்கு விரைவாக மாறுவதும் தேவைக் குறைவும் இதற்கு காரணமாக கூறியுள்ளது.
865 மில்லியன் டாலர் மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆட்குறைப்பு செய்யப்படுவதாகவும் வரும் மாதங்களில் மேலும் ஆட்குறைப்புக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.