டிரினிடாட்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி தொடரை 2-1 என கைப்பற்றி சாதனை படைத்தது.
டிரினிடாட்டில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 294 ரன்கள் குவித்தது. தனது 19-வது சதத்தை அடித்த கேப்டன் ஷாய் ஹோப் 94 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 120 ரன்கள் விளாசினார்.