சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் சூரிய ஒளி மின்சார உற்பத்திக்காக 40 மெகாவாட் சோலார் கட்டமைப்புகளை நிறுவுவதற்காக பசுமை எரிசக்தி கழகம் டெண்டர் கோரியுள்ளது.
தமிழக அரசு அலுவலகங்களில் தினமும் பகல் நேர மின்சாரத் தேவைக்கு ஏற்ற திறனுடன் சோலார் பேனல் அமைக்க அரசு கடந்த 2023-ம் ஆண்டு முடிவு செய்து, அதற்கான திட்டத்தை அறிவித்தது. சில அரசு அலுவலகங்களில் இத்திட்டம் செயல் படுத்தப்பட்டுள்ளது.