லண்டன்: ஓவல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை 6 ரன்களில் வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்நிலையில், 4-ம் நாள் ஆட்டத்தை நடுவர்கள் முன்கூட்டியே நிறைவு செய்தது ஏன்? என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்களான ஸ்டூவர்ட் பிராட் மற்றும் நாசர் ஹுசைன் ஆகியோர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
4-ம் நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிட்ட காரணத்தால் ஆட்டம் தடைபட்டது. அதன் பின்னர் நடுவர்கள் அந்த நாள் ஆட்டத்தை நிறைவு செய்யும் முடிவை அறிவித்தனர். அப்போது இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 35 ரன்கள் தேவையாக இருந்தது. இந்தியாவின் வெற்றிக்கு 4 விக்கெட்டுகள் தேவைப்பட்டது. ஆட்டம் 5-ம் நாளன்று நடத்தப்பட்டது. இதில் இந்தியா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் செய்தது.