கோவை: கருமத்தம்பட்டி அருகே 4 மூட்டைகளில் கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார். மூட்டைகளில் கள்ள நோட்டுகள், அதிநவீன பிரிண்டர், ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 4 பேர் தப்பியோடினர். டோல்கேட் வழியாக வந்த காரை சோதனை செய்ததில் ரூ.2,000, ரூ.500 கள்ளநோட்டுகள் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டு இளவரசன் என்பவர் கைது செய்யப்பட்டார். தப்பியோடிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
The post 4 மூட்டைகளில் கள்ள நோட்டுகள் பறிமுதல்: ஒருவர் கைது appeared first on Dinakaran.