டியுனெடினில் இன்று நடைபெற்ற 2-வது சர்வதேச டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்று முன்னிலை வகிக்கிறது.
பாபர் அசாம், ரிஸ்வான் போன்ற அனுபவ வீரர்கள் இல்லாத பாகிஸ்தான் அணி பல்வேறு கடினப்பாடுகளைச் சந்தித்து வருகிறது. சாம்பியன்ஸ் டிராபியில் ஏற்பட்ட ரூ.738 கோடி நஷ்டத்தினால் வீரர்கள் தங்குமிட வசதிகள் முதல் பல்வேறு சலுகைகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குறைத்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன.