புதுடெல்லி: தேசிய பேரிடர் மீட்பு நிதியத்தின் கீழ் ஆந்திரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.1554.99 கோடி நிதி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்திருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமித் ஷா இன்று (பிப்.19) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக மோடி அரசு ஒரு பாறை போல் நிற்கிறது. இன்று, உள்துறை அமைச்சகம் ஆந்திரப்பிரதேசம், நாகாலாந்து, ஒடிசா, தெலங்கானா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் ரூ.1554.99 கோடியை கூடுதலாக வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதிக்காக 27 மாநிலங்களுக்கு ரூ.18,322.80 கோடி ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில், இந்த தொகை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.