அண்டை நாடான சீனாவில் இருந்து மலிவு விலையில் இறக்குமதி செய்யப்படும் 5 பொருட்களுக்கு பொருள் குவிப்பு எதிர்ப்பு வரியை இந்தியா விதித்துள்ளது. உள்நாட்டு தொழிலை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதுகுறித்து மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம், வருவாய் துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வாக்குவம் பிளாஸ்க், அலுமினிய தாள், மின்னணு பாகங்களில் பயன்படுத்தப்படும் காந்தப்பொருட்கள், டிரைக்ளோரோ ஐசோசயனூரிக் அமிலம், பாலி வினைல் குளோரைடு பேஸ்ட் பிசின் ஆகிய 5 பொருட்கள் வழக்கமான விலைக்கும் குறைவாக சீனாவில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால், உள்ளூரில் அத்தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களால் சந்தையில் போட்டியிட முடியாத சூழல் நிலவுகிறது.