வீடுகளில் 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தும் குடும்பங்கள் இனி தங்களது மாடிகளில் சோலார் பேனல் அமைப்பது கட்டாயமாகிறது.
2025-ம் ஆண்டுக்கான எரிசக்தி கொள்கை மசோதாவில் கேரள அரசு இந்த பரிந்துரையை வழங்கியுள்ளது. குறைந்தபட்சம் வீட்டு மாடியில் 100 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த சோலார் பேனலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 1 கிலோவாட் திறன் கொண்ட பிளாண்டை அவர்கள் நிறுவ வேண்டும்.