மதுரை: கடந்த 3 ஆண்டுகளாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மதுரை மாட்டுத்தாவணி ‘டைடல் பார்க்’ திட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். ரூ.314 கோடியில் அமையும் இந்த திட்டத்தால் 5,500 படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.
தலைநகர் சென்னையைப் போல், மதுரையில் தவகல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்புகளை உருவாக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘டைடல் பார்க்’ திட்டம் அமைக்கப்படும் என கடந்த 2022-ம் ஆண்டு அறிவித்து இருந்தார். அதன்பிறகு இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்ததால் தென் மாவட்ட படித்த இளைஞர்கள், தவகல் தொழில்நுட்ப தொழில் முனைவோர்கள் ஏமாற்றம் அடைந்து இருந்தனர்.