கோவை: “எந்தப் பிரச்சினையையும் பொறுமையுடனும் விவேகத்துடனும் எதிர்கொள்ளக்கூடிய திறமை கொண்டவர். 65 ஆண்டுகள் தொடர்ந்து பொறுப்பு வகிப்பது மிகவும் சிரமமான காரியம்” என திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் சு.துரைசாமிக்கு கோவையில் நடந்த விழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கோவை மாவட்ட பஞ்சாலை தொழிற்சங்கங்கள் சார்பில், திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர், கோவை மற்றும் பெரியார் மாவட்ட திராவிட பஞ்சாலைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளர் சு.துரைசாமிக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை கோவை, ஹோப்காலேஜ் அருகே உள்ள மணி மஹாலில் நடந்தது.