சென்னை கிண்டியில் 2 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்டமான பல்நோக்கு மையம் கட்டப்படவுள்ளது என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கிண்டி, நாகிரெட்டி தோட்டம், அருளையியம்மன்பேட்டையில் வருவாய் துறைக்கு சொந்தமான 7 ஏக்கர் இடத்தில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் புதிய பல்நோக்கு மையம் அமைக்கப்பட உள்ளது. அந்த இடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.