பாட்னா: மூத்த தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் தலைவரின் கருத்தால் பிஹார் பாஜகவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பிஹாரில் வரும் அக்டோபரில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுக்காக பாஜக நன்கு திட்டமிட்டு வருகிறது. இதற்கிடையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், “75 வயது முடிந்தவர்கள் அடுத்தவர்களுக்கு வழிவிடுவதுதான் இயற்கையானது” என்று அண்மையில் கூறினார். ஆர்எஸ்எஸ் தனது தாய் அமைப்பு என்பதால், அதன் கொள்கைகளை அமலாக்குவதை பாஜக தனது கடமையாக கொண்டுள்ளது. இந்நிலையில், பாகவத்தின் 75 வயது கருத்தை பிஹார் தேர்தலில் அமலாக்குவதா, வேண்டாமா என பாஜக குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாக தெரிகிறது.